அழிவில் கிராமத்து விளையாட்டுக்கள்

Monday, January 18, 2010


 கொலை கொலையா முந்திரிக்கா
கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் இன்று அழிந்து விட்டன என்றே சொல்லலாம். கிராமத்தில் சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு உண்டு. விளையாட்டுக்கள் எல்லாம் தினமும் மாலை வேளையில் விளையாடுவார்கள்.
சிறு குழந்தைகள் எல்லாம் கண்ணாம் மூச்சி, ஐஸ்வண்டி, கொழை கொழையா முந்திரிக்கா, இந்த விளையாட்டுக்கள் எல்லாம் முதல் வகுப்பிற்கு செல்லும் குழந்தைகள் விளையாடுவார்கள்.

 கபடி
கொஞ்சம் பெரியவர்கள் எல்லாம் தொட்டு விளையாடுதல், துரத்தி விளையாடுதல், நொங்கு வண்டி, தெள்ளு, கோழிக்குண்டு (குண்டு விளையடுவதில் இழுக்கறது, கீழே மேலே என்ற வகை உண்டு) பட்டம் விடுதல், இடு பந்து, கிட்டிப்புல், கில்லி தாண்டு, தாச்சு மறித்தல், திருடன் போலீஸ் என விளையாடுவார்கள்.
பெண்கள் எல்லாம் அஞ்சாங்கல், நொண்டி, சில்லி, கபடி, வலைப்பந்து, பல்லாங்குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுக்களை பெண்கள் விளையாடுவார்கள்.

பல்லாங்குழி
பெரியவர்கள் எல்லாம் நீச்சல், கபடி, கயிர் இழத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் விளையாடுவர்.
இந்த விளையாட்டுக்கள் எல்லாம் நம் கிராமத்து மண்வாசனையுடன் உள்ள விளையாட்டுக்கள். இந்த விளையாட்டுக்களை விளையாடும் போது மனம் அமைதியும் சந்தோசம் மட்டுமே இருக்கும். முக்கியமாக இந்த விளையாட்டுக்கு எல்லாம் பணம் தேவையில்லை. விளையாட்டுக்கு தேவைப்படும் பொருட்கள் எல்லாம் கிராமத்திலேயே கிடைக்கும்.

சில்லி
இன்று இந்த விளையாட்டுக்களை யாரும் விளையாடுவது இல்லை, இந்த விளையாட்டுக்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கும் போது ரசித்து ரசித்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இன்று நான் ஊரிற்கு செல்லும் போது இந்த விளையாட்டுக்கள் எல்லாம் யாரும் விளையாடுவது இல்லை. நம் கண் முன்னே இவ்விளையாட்டுக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன.
படங்கள் உதவி : கூகுள்

அறியாப் பருவத்தில் காதல்

Friday, January 8, 2010


செந்தாம்பாளையம் என்னும் அழகிய கிராமத்தில் உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 15 மாணவ, மாணவிகள் செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்களில் 5பேர் மட்டும் தனி அணி எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள் பள்ளியிலும் ஊரிலும் இவர்கள் அனைவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

அந்த ஊரில் உள்ள மைதானத்தில் தினமும் மாலை வேலை இவர்களுக்கு கபடி விளையாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டிப்பழகுவது இதுதான் வேலை. இது தான் இவர்களின் அன்றாட நடைமுறை 6 மணிக்குமேல் ஊரில் உள்ள சிறுபாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருப்பது பொழுதுபோக்கு. அப்போது வந்த சினிமா பாடல்களை எல்லாம் கேட்டு காதலைப்பற்றி பேசுகிறார்கள். இதுதான் இவர்களது பொழுதுபோக்கு.
 ஒருநாள் செந்தில் கூறுகிறான் டேய் நாமளும் காதல் செய்யலாமடா. ஐயோ எங்கம்மாவுக்கு தெரிஞ்சா விளக்குமாத்துல பின்னிடுவாங்கடா நான் வரலை என விஜய் கூறுகிறான் அதற்கு குமார் ஆமாண்ட எங்க வீட்லியும் பின்னிடுவாங்க. போடா யாருக்கும் தெரியாது நாம பண்ணலாமடா இது சத்யா. எல்லாரும் இன்னிக்கு இரவு வீட்டுக்குப்போய் முடிவுபண்ணுங்க நாளை ஞாயிறு தான் எல்லாம் காலை கிணத்து மேட்டில் சந்திப்போம் இது கவுதமன்.

 அடுத்தநாள் கிணத்துமேட்டில் அனைவரும் ஆஜர். சத்யா மட்டும் வரல. என்னடா முடிவு செய்தீர்கள் என ஆரம்பிக்கிறான் கவுதமன் எல்லோருக்கும் சரின்னு நினைக்கிறேன் ஆனா யாருக்கும் தெரியாம செய்யனும் இருங்கடா சத்யாவும் வரட்டும் இல்லைனா இரண்டு நாளைக்கு பேசமாட்டான்னு விஜய் சொல்லவும் சத்யா காதில் கேட்டபடியே வர என்னாடா என்னைத் திட்டறீங்க எங்க அப்பா கறி வாங்கிட்டு வான்னு கடைக்கு அனுப்பீட்டார் அதுதான் லேட்டு சரி மேட்டருக்கு வாங்க நான் முடிவு செய்துவிட்டேன் என் பக்கத்து வீட்டு கயல்விழிய லவ் பன்றதுன்னு இவன் சொல்ல என்னடா சொல்றீன்னு மற்றவர்கள் கேட்க இல்லடா வரும்போது என்னைப்பார்த்து சிரிச்சிட்டுப் போனா எனக்கும் அவளைப்பிடிக்கும் அதுதான் முடிவு செய்துவிட்டேன். டேய் நீங்க எல்லாம். என்னடா விஜய் சொல்லுங்கடா. ஆமாம் நாங்களும் முடிவு செய்துவிட்டோம் லவ் பண்ணாலாம்னு. நீ கயல்னு சொல்லிட்ட நாங்க யோசிக்கிறேன். உடனே கவுதம் இதில் என்னடா யோசிக்கிறது கயல் நம்ம கூட படிக்கற அது கூட நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர்ற தேவி எனக்கு, அப்ப விஜய் உனக்குடா எனக்கு நித்யாடா அது எனக்கு மாமா பொண்ணுதான்டா, செந்தில் உனக்கு எனக்கு ஸ்ரீ. டேய் எனக்கு ஸ்ரீடா நீ வேனும்னா ரம்யாவ லவ் பண்ணுடா நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை போடுவீங்களே இது குமார். சரிடா உனக்க ஸ்ரீ எனக்கு ரம்யா ஒரு வழியா முடிவு செய்து எல்லாரும் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

 பள்ளியில் இவர்களுக்குள்ளே ஒரு சிரிப்பு டேய் என்னப்பாக்கராலான்னு பாரு ஆமாண்டா பாக்கற மாதிரி இருக்கு ஆனா பாக்கலடா எப்படிடா அவகிட்ட பேசறது சரி சாயங்காலம் பள்ளி விட்டு போகும் போது பேசலாமடா என முடிவு செய்து மாலை நாலு மணிக்காக அனைவரும் காத்துகிடக்கின்றனர்.

 பள்ளி விட்டு அனைவரும் போகும் போது பொண்ணுங்க எல்லாம் முன்னாடி போக இவர்கள் பின்னாடி போக நீ பேசு, இல்ல நீ பேசுன்னு யாருமே பேசல இப்படியே நாட்கள் கடந்து விட்டது. ஒரு நாள் டேய் சத்யா உன் வீட்டுக்குப் பக்கத்தில் தான கயல் வீடு நீ பேசு என உசுப்பேத்த சத்யா கயல் எங்க வீட்டுக்கே போறான்னு கேட்க கயல் இல்ல அக்கா வீட்டுக்கு ஏன் கேக்கற என்ன சொல்றதுன்னு தெரியாம பய பேந்த பேந்த விழிக்க கவுதம் புக் வேணும்னு கேள்றான்னு சொல்ல இல்ல என் புத்தகத்தை காணம் அதுதான் உங்கிட்ட வாங்கிக்கலாம்னு கேட்டேன் இரு உங்க அம்மாகிட்ட சொல்றன் புக்கத் தொலைச்சிட்டு ஊர் சுத்தரியா என கயல் கூற பய டேய் ஏன்டா இப்படி பன்றீங்க அவ வீட்ல சொன்னா எனக்கு மாத்துதான்.

இப்படி நாட்கள் செல்ல செல்ல பரிட்சையும் முடிந்து அவர்கள் வகுப்பாசிரியர் அன்று தான் அன்பாக பேசினார் என் மாணவ மணிகளே உங்களுக்கு இந்த வருடத்துடன் இங்கு படிப்பு முடிகிறது இனி நீங்க மேலே படிக்க வேண்டும் என்றால் ஆவாரம்பாளையம் சென்று தான் படிக்க வேண்டும் அனைவரும் நன்றாக படிக்க எனது வாழ்ததுக்கள் உங்களுக்கு எல்லாம் பரிட்ச்சை ரிசல்ட் வருகிற 18ம் தேதி ஒட்டப்படும் பாசானவங்க எல்லாம் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு செல்லலாம்.